என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிதிநிறுவன அதிபர் தற்கொலை"
சத்தியமங்கலம்:
கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). இவர் தனது பெற்றோருடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திருநகர் காலனியில் வசித்து வந்தார்.
கார்த்தி நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களாக அவர் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் கார்த்தி தனது வீட்டில் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் “வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல” என்று எழுதி இருந்தார்.
கார்த்தி என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? பண நெருக்கடியில் தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை.
இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்